மேலும்

19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைப்பு

19சிறிலங்காவில் பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்கெடுப்பு ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று வருகிறது.

அதேவேளை, 19வது திருத்தச்சட்டத்தில், அரசியலமைப்புச் சபை நியமனத்தில் இருந்து வந்த இழுபறி தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதன்படி, 10 பேர் கொண்ட அரசியலமைப்புச்சபையில் பிரதமர், சபாநாயகர்,எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பி்ந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *