19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.