மேலும்

நாள்: 19th April 2015

முன்னாள் போராளிகளில் 324 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

போருக்குப் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 324 பேர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.

பட்டுப்பாதை திட்டத்தை தடுத்தால் பெரும் பிரச்சினை உருவெடுக்கும் – சீனா எச்சரிக்கை

தனது பட்டுப்பாதைத் திட்டத்தில் இந்தியா குறுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள சீனா, தனது திட்டங்களை இந்தியா தடுத்தால், அது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பொறுப்பேற்றார் புகழ்பெற்ற நாவலாசிரியர்

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நேற்று பதவியேற்றார்.

உக்ரேன் செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்ட விசாரணைக்குழு

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான, உதயங்க வீரதுங்க தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்க மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று உக்ரேனுக்குச் செல்லவுள்ளது.

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தை, முன்னர் திட்டமிட்டவாறு நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்று இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பன்டுங் மாநாட்டுக்கு சரத் அமுனுகமவை அனுப்புகிறார் மைத்திரி

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பன்டுங் நகரங்களில் நடைபெறவுள்ள ஆசிய-ஆபிரிக்க மாநாட்டு அமைப்பின் 60வது ஆண்டு நிறைவு உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபரின் சிறப்புப் பிரதிநிதியாக, உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம கலந்து கொள்ளவுள்ளார்.

செவ்வாய் பிற்பகல் சிறிலங்கா திரும்பும் பசில் கைது செய்யப்படமாட்டார்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள நிலையில், அவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு நடத்துவார் ஜோன் கெரி

அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றம் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.