மேலும்

மகிந்தவுக்கு மைத்திரி சவால் – பகிரங்க விவாதம் நடத்த வருமாறு அழைப்பு

maithriசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தன்னுடன் பகிரங்கமான நேரடி விவாதம் நடத்த வருமாறு, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

பலப்பிட்டியவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வைத்தே, அடுத்தமாதம், தன்னுடன் பகிரங்கமான நேரடி விவாதம் நடந்த வருமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நல்லாட்சி, ஜனநாயகம் குறித்து தான் மகிந்த ராஜபக்சவுடன் பகிரங்கமாக விவாதிக்கத் தயார் என்றும் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் இந்த விவாதத்துக்கு இணங்கினால், தான் கையில் எந்த எழுத்து மூல ஆவணங்களும் இல்லாமல் அவருடன் பகிரங்கமாக விவாதம் நடத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்த மகிந்த ராஜபக்ச தவறிவிட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *