மேலும்

Archives

40 ஆண்டுகளில் சிறிலங்காவின் கையில் கிடைத்த மிகப்பெரிய வெளிநாட்டு கொடுப்பனவு

நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமருக்கு மிகப் பெருமளவு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 ஆண்டு குத்தகை உரிமையைப் பெற்றுக் கொண்ட சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம் என்ற சீன நிறுவனமே, சுமார் 292 மில்லியன் டொலருக்கான காசோலையை வழங்கியுள்ளது.

போர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்

சிறிலங்காவில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் ஈடுபட்டு, வலது கண்ணையும், இடதுகை விரல்களையும் இழந்த, இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான கேணல் அனில் கௌல் போர் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் பொறுப்பேற்றது – 293 மில்லியன் டொலர் கையளிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் இன்று சீன நிறுவனத்திடம் முறைப்படி கையளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை முறைமுகத்தை செயற்படுத்துவதற்காக, அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் நிறுவனங்களுடன்  சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்

யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மற்றொரு திருமணம் பற்றியே பேசினோம் – மைத்திரியுடனான சந்திப்புக் குறித்து மகிந்த

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் கட்டுப்பணம் செலுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரம்

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் கூட்டமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

உதயசூரியன் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில், புதியதொரு அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த 5 சிறிலங்கா மீனவர்களை மீட்டது ஈரானிய எண்ணெய் கப்பல்

படகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா மீனவர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக, இர்னா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்

பிரெஞ்சுக் கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட போர்க்கப்பலான FS Auvergne  நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

தமிழ்க் குடும்பத்தை சிறிலங்காவுக்கு நாடுகடத்தியது கனடா

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.