முன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன்- சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்
அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


