மேலும்

வடக்கு ஆளுனராக மீண்டும் ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுனராக  ரெஜினோல்ட் குரே மீண்டும்  நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், அவர் இன்று காலை வடக்கு மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக இருந்த ரெஜினோல்ட் குரே நேற்று மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டு, சிறிலங்கா அதிபர் முன்னிலையில் பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அவர் வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *