மேலும்

கட்சிகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அதிபர் அவசர அழைப்பு

maithri-unநாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இந்தக் கூட்டத்துக்கான அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் சில காணாமல் போயுள்ளதாக அரசாங்கத்துக்குள்ளே இருந்தும், வெளியே இருந்தும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் விளக்கமளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

அறிக்கையின் பக்கங்கள் சிலவற்றைக் காணவில்லை என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார். அறிக்கை முழுமையாகவே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *