மேலும்

நாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த

நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே கூட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றம், வரும் 16ஆம் நாளே கூடும் என்று அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை.

நாடாளுமன்றம் வரும் 5ஆம் நாள் கூட்டப்படும் என்று நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

ஆனால் அவர், அதற்குச் சாத்தியம் உள்ளது என்ற அடிப்படையில் தான் அப்படிக் கூறினார் ‘ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *