நாடாளுமன்றம் 14ஆம் நாளே கூடும்- அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார் சிறிசேன
சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் நாள் மீண்டும் கூட்டுவதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.
வரும் 14ஆம் நாள் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று அரசிதழ் அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் நாள் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மறுநாள் நாடாளுமன்றத்தை ஒக்ரோபர் 16ஆம் நாள் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதற்கு அனைத்துலக சமூம், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தின.
இதற்கமைய, இந்த வாரம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அதனைக் கூட்டும் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டுள்ளார்.