மேலும்

அதிபர் தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தலுக்கு வாய்ப்பு – சிறிலங்கா அதிபர்

இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பலவீனமான நாடாளுமன்றம் ஒன்றில் உறுதியான முடிவுகளை எடுப்பது கடினமானது, என்றும், அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்கிடையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தும் அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இல்லை.

இந்த நிலையில்,  சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்தினால், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து, மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *