மேலும்

Tag Archives: எவ்பிஐ

பறிபோனது 2.5 மில்லியன் டொலர்- கண்டுபிடித்தது 200 டொலர்

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவிய இணைய மோசடியாளர்களால்,  திறைசேரியில் இருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 200 டொலர்கள் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

எவ்பிஐ சிறப்புக் குழு சிறிலங்கா அனுப்பப்படவில்லை- அமெரிக்க தூதரகம்

சிறிலங்கா திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக, எவ்பிஐ  சிறப்புக் குழுவினர் யாரும் சிறிலங்காவிற்கு அனுப்பப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் விசாரணைகளை தொடங்கியது எவ்பிஐ

சிறிலங்கா திறைசேரியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட  2.5 மில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய 625,000டொலர்கள் இணையவழியில்  திருடப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உதவ, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

திறைசேரி நிதி மோசடி- அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டது

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது குறித்த  விசாரணையை விரிவுபடுத்தும் வகையில், சிறிலங்கா புலனாய்வாளர்கள் அமெரிக்காவின் எவ்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

எவ்பிஐ உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புக் குழுக்கள் நீண்டநாட்கள் தங்கியிருக்காது 

அமெரிக்க  பாதுகாப்புக் குழுக்கள் நீண்ட நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 20 ஆண்டு சிறைத்தண்டனையில் சிக்கும் நிலையில் மகிந்தவின் மைத்துனர்

அமெரிக்க நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஜாலிய விக்ரமசூரிய மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்,  20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு உதவ வந்தது அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் குழு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள, சொத்துக்கள், நிதி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்கா வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.