அமெரிக்க பாதுகாப்புக் குழுக்கள் நீண்டநாட்கள் தங்கியிருக்காது
அமெரிக்க பாதுகாப்புக் குழுக்கள் நீண்ட நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து உதவி வருகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, அண்மைய தாக்குதல்களுடன் தொடர்புடைய குறுகியகால, குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றவும், குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்காகவும், அமெரிக்க நிபுணர்கள், சிறிலங்கா பங்காளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஒத்துழைப்பு, நாட்டில் அமெரிக்க பாதுகாப்புக் குழுக்களின் பெரியதொரு- நீண்டகால இருப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கவில்லை. ” என்றும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், எவ்பிஐ எனப்படும், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்றும், இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தின் இராணுவ நிபுணர்களும் சிறிலங்காவில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.