நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை116 வாக்குகளால் தோல்வி
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116 பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116 பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.
பல பத்தாண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
கைதிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழக்கக் காரணமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
செம்மணி, மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என சிறிலங்காவின் நீதி அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, தனிநபர்களையோ அல்லது பிற தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஒரு புதிய சட்டமூலம், இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்பும் விசாரணை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து 16 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.