மேலும்

Tag Archives: சீனா

யேமனில் சிக்கியோரை மீட்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா

போர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது. 

அமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் இந்தியாவின் நிலை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பூகோள-அரசியல் போட்டியில், இந்திய மாக்கடலின் அதிகார சக்தி என்ற வகையில் இந்தியா நிச்சயமாக ஒரு நடுநிலையாளராகவே செயற்படும்.இவ்வாறு The diplomat  ஊடகத்தில், Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தலாய்லாமாவுக்கு நுழைவிசைவு மறுக்கும் சிறிலங்கா – சீனா வரவேற்பு

திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவு வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சீனா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

வடக்கில் கைத்தொழில் வலயங்களை உருவாக்க சீனா விருப்பம் – இந்தியாவுக்குப் போட்டி

சிறிலங்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில், கைத்தொழில் அல்லது பொருளாதார வலயங்களை நிறுவ சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி

சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.

மகிந்தவை விடவும் சீனாவுக்கு வேண்டியவராகிவிட்ட மைத்திரி – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.

சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்குகிறது சீனா

சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, சிறிலங்கா இடையே முத்தரப்பு பேச்சுக்கு சீன அதிபர் யோசனை

பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, சிறிலங்கா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.

சென்னையில் தூதரகம் அமைக்க சீனா ஆர்வம் – தமிழ்நாட்டின் மீது திரும்புகிறது கவனம்

தமிழ்நாட்டுடனான வர்த்தக, கலாசார உறவுகளை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய,  இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லீ யூசெங், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம்  தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்றும், சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.