மேலும்

புதிய திட்டங்கள் தொடர்பாக சிறிலங்காவுடன் பேசுகிறதாம் சீனா

Srilanka-chinaசிறிலங்காவில் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் சினா பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் கப்பல் கட்டும்தளம் ஒன்றை நிறுவுவதற்கு சீன நிறுவனம் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்தை அணுகியிருக்கிறது.

இந்த திட்டம் தொடர்பாக, குறிப்பிட்ட சீன நிறுவனத்துடன் துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொழும்பு- கண்டி நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், வரும் டிசெம்பரில் பல புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதலீடுகள், திட்டங்களை தற்போதைய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச பரப்புரை செய்து வரும் நிலையிலேயே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீன முதலீடுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *