மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவில் ஒரு இலட்சம் வேலைகள் பறிபோகும் ஆபத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக, சிறிலங்காவில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ வேலி

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில், சிறிலங்கா படையினரின் நீண்டகால ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள்,  விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும், அந்தக் காணிகளை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் தமது கண்காணிப்பில் வைத்துள்ளதால் உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

18 உள்ளூராட்சி சபைகளில் அஞ்சல் வாக்களிப்பு தாமதம்.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கான, அஞ்சல் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பிள்ளையானுடன் பேச ரணிலுக்கு தடை – கம்மன்பிலவுக்கு அனுமதி.

குற்றப் புலனாய்வுத்துறையின் தடுப்புக்காவலில் உள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுடன் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமாகும் இனப்படுகொலை நினைவுச்சின்னங்கள்

சிறிலங்காவின் போர் மற்றும் இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள்,  பூகோள இருண்ட சுற்றுலா (Dark Tourism) சந்தையின் வளர்ச்சி மற்றும் வருமான அதிகரிப்புக்கான காரணிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்துக்களை நீக்குமாறு மோடியிடம் வலியுறுத்திய மகாநாயக்கர்கள்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள  பௌத்த புனிதத்தலமான புத்தகயாவின் முகாமைத்துவப் பொறுப்பில் இருந்து இந்துக்கள் நீக்கப்பட வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் வலியுறுத்தியுள்ளன.

சிக்கலில் சிக்கினார் அமைச்சர் வசந்த சமரசிங்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வர்த்தக அமைச்சராக உள்ள, வசந்த சமரசிங்க, மோசடி வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவாரா என்பது குறித்து கல்கிசை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

தேசபந்துவின் பிணைக்கு எதிராக மீளாய்வு மனு

பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க, மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபர் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.

மகிழ்வுடன் மீண்டும் இணைகிறோம்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘புதினப்பலகை’ மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.

டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை

டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.