விரைவில் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம்
அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரின் லகாட் அடுத்தமாதம் கொழும்புக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் முற்பகுதியில் அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரின் லகாட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவரிடம் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அறிக்கை ஒன்றை அரசாங்கம் கையளிக்கவுள்ளது.
இவரது பயணத்துக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.