சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் பிரியசாத் டெப்
சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபரில் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இன்று பதவியேற்றுள்ள பிரியசாத் டெப், சிறிலங்காவின் 45 ஆவது தலைமை நீதியரசராவார்.
இவர், 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை சிறிலங்காவின் தலைமை சட்ட ஆலோசகராக (சொலிசிற்றர் ஜெனரல்) பதவி வகித்திருந்தார்.
அத்துடன், தலைமை நீதியரசர் பணியில் இல்லாத பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் பதில் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியுள்ளார்.