மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சம்பந்தன், ரணில், மைத்திரியை இன்று சந்திக்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை இன்று மாலை நிறைவு செய்து கொள்ளவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

எல்லாக் கேள்விகளுக்கும் இன்று பதிலளிப்பேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

எல்லாக் கேள்விகளுக்கும் இன்று தான் பதிலளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஐதேக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள், முப்படைத் தளபதிகளை சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்தும் யோசித – சட்டைப்பையில் இருந்து விழுந்ததால் சிக்கல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்சவிடம் கைத்தொலைபேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் தாம் அனைத்து சமூகத்தினருடனும், பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

சீனாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பிக்கத் தயார் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை புதிப்பித்து மீண்டும் வலுப்படுத்துவதற்கு, தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யோசித கைது விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராய்வு

லெப்.யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், ஆராயப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் தேசியகீதம் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல – இரா.சம்பந்தன்

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

கொள்ளையடிக்க வருகிறார் சுஸ்மா, கூண்டிலேற்ற வருகிறார் ஹுசேன் – ஜி.எல்.பீரிஸ்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட்அல் ஹுசேன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் சிறிலங்கா பயணங்கள், நாட்டுக்கு எதிரான சிவப்பு சமிஞ்ஞையின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.