மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பளை துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்படுமாம்

பளை பகுதியில் சிறிலங்கா காவல்துறையின் ரோந்து வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் முடிவுக்கு வந்ததும், அதுபற்றிய விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சரவை முடிவு

இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சி செய்யும் சக்திகளுக்கு எதிராக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை தீர்மானத்துள்ளது.

சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்

இன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அமைச்சரவை மாற்றியமைப்பு – 9 அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையில்  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அதிபர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஒன்பது அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் புதிய பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.

இன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்?

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்

குருநாகல் – மல்லவப்பிட்டியவில்  முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கனேடியப் போர்க்கப்பல்

கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எச்எம்சிஎஸ் வின்னிபெக் HMCS Winnipeg (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அவசர நிலையை எதிர்கொள்ள படையினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குற்றமிழைத்த சிறிலங்கா படையினருக்கு சிறைச்சாலைக்குள் ஆசி வழங்கிய எல்லே குணவன்ச தேரர்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை சிறைச்சாலையில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.

திங்களன்று அமைச்சரவை மாற்றம் – மங்களவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பறிபோகிறது

சிறிலங்கா அமைச்சரவை வரும் திங்கட்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.