சிறிலங்கா அமைச்சரவை மாற்றியமைப்பு – 9 அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் நியமனம்
சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அதிபர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஒன்பது அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் புதிய பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.
இதன்படி வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திலக் மாரப்பன மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அபிவிருத்தி ஏற்பாடுகள் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்றுபதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான பொறுப்புகள் பற்றிய விபரங்கள் வருமாறு-
1. மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
2. ரவி கருணாநாயக்க – வெளிவிவகார அமைச்சர்
3. எஸ்.பி. திசநாயக்க – சமூக அபிவிருத்தி, நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர்
4. ஜோன் செனிவிரத்ன – தொழில், தொழிற்சங்க உறவுகள், மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர்
5. மகிந்த சமரசிங்க – துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்
6. கயந்த கருணாதிலக – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்
7. அர்ஜூன ரணதுங்க – பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
8. சந்திம வீரக்கொடி – திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
9. திலக் மாரப்பன – அபிவிருத்தி ஏற்பாடுகள் அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்
1. மகிந்த அமரவீர – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ( ஏற்கனவே உள்ள கடற்றொழில் , கடல் வளங்கள் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.