மேலும்

சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்

maithriஇன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒன்பது அமைச்சர்கள் புதிய அமைச்சுக்களுக்கு நேற்று நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த அமைச்சுக்களுக்கான புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள்கள் பயணமாக இன்று பிற்பகல் அவுஸ்ரேலியா செல்லவுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *