ரவிராஜ் படுகொலை வழக்கு – 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள, கொழும்பு மேலதிக நீதிவான், இந்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.