மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ரவிராஜ் படுகொலை வழக்கு – 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக,  ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள, கொழும்பு மேலதிக நீதிவான், இந்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

லசந்த, ரவிராஜ் படுகொலைகளின் பின்னணியில் மகிந்த, கோத்தா- பொன்சேகா தகவல்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் உள்ளிட்டோரின் படுகொலைகளை மேற்கொண்ட குழுவினருக்குப் பின்னணியில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச போன்றவர்களே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.

மகிந்த அணியினரின் அரச எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரின் பேரணி தற்போது கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேரணியில்  மகிந்த ராஜபக்ச தற்போது இணைந்து கொண்டுள்ளார்.

மீண்டும் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன் – ரணில் எச்சரிக்கை

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால்,  பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சுரனிமல ராஜபக்ச மரணம்

முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா பிரதமரின் இணைப்புச் செயலருமான சுரனிமல ராஜபக்ச இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67 ஆகும்.

போர் விதிமுறைகளுக்கு முரணாக பிரபாகரன் கொல்லப்பட்டாரா?- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா என்பது, விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி – புலம்புகிறார் மகிந்த

போர் விதிமுறைகளுக்கு முரணாகப் போரிட்டதாக, குற்றம்சாட்டி எம்மைப் போர்க்குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

உண்மையான விசாரணை நடத்தினால் பொன்சேகாவே முதல் குற்றவாளியாக சிக்குவார் – ரம்புக்வெல

வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது?- கண்டுபிடிக்கச் சொல்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் ஆளணியை குறைக்கவில்லை- ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆளணியைக் குறைக்க  எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை  என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.