மேலும்

மாதம்: August 2025

அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்கு தொடரப்பட்ட பின்னர் தீர்மானம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்கு தொடரப்பட்டால், அதன் பின்னர் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தில் 600 மில்லியன் ரூபாவில் புதிய முனையம்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டடம் கட்டப்படவுள்ளதுடன், ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இந்த ஆண்டு புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக, சமர்ப்பிக்கப்பட்டிருந்த 36 விண்ணப்பங்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

ரணிலை விசாரணைக்கு அழைத்தது குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, வரும்  வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு,  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வோல்கர் டர்க் குற்றச்சாட்டுக்கு பதில் அறிக்கை தயாரிக்கும் சட்டமா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பதில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பும் அகதிகள் கைது- மீள்குடியமர்வை இடைநிறுத்தியது ஐ.நா

இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.

ஜெனிவா பிரேரணை கடுமையானதாக இருக்காது- சிறிலங்கா நம்பிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், சிறிலங்கா  தொடர்பாக முன்வைக்கப்படும் புதிய பிரேரணை, கடுமையானதாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் 16 வீதம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

சிறிலங்காவில் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் 16 சதவீதமானோர் இருப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கடத்த முயற்சி

சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீதி வழங்கத் தடையாக இருக்கிறது சட்டமா அதிபர் திணைக்களம்

மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.