மேலும்

நாள்: 28th August 2025

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கையொப்பங்கள் ஐ.நாவுக்கு அனுப்பி வைப்பு

நீதியின் ஓலம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் கடந்த 5 நாட்களாகத் திரட்டப்பட்ட  ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்கள்,  ஐ.நா. வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தொடர்ந்து அடக்குமுறை

சிறிலங்காவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக் குழு விசனம் தெரிவித்துள்ளது.

செம்மணியில் இன்றும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து, இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை

அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் வகை கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa)  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அனுமதி

சிறிலங்கா பழங்களுக்கான மதிப்பு கூட்டலை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தின் நிலையான தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, சீன வெப்பமண்டல விவசாய அறிவியல் அகாடமியுடன் புரிந்துணர்வு  உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

ரணில் கைதுக்கு எதிராக வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்கள் இல்லை

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எந்த இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எந்த எதிர்ப்பும்  தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை

இன அல்லது மத நோக்கங்களுடன் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.