மேலும்

நாள்: 20th August 2025

முத்தையன்கட்டு இளைஞன் மரணம்- 2 இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக- கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் இருவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தட்டிக்கழிக்க அரசாங்கம் முயற்சி

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்கு தொடரப்பட்ட பின்னர் தீர்மானம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்கு தொடரப்பட்டால், அதன் பின்னர் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தில் 600 மில்லியன் ரூபாவில் புதிய முனையம்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டடம் கட்டப்படவுள்ளதுடன், ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இந்த ஆண்டு புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக, சமர்ப்பிக்கப்பட்டிருந்த 36 விண்ணப்பங்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.