மேலும்

நாள்: 4th August 2025

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று பதிதாக 5 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி- சர்வதேச பொறிமுறையை கோருகிறார் விக்னேஸ்வரன்

செம்மணிப் புதைகுழியில் சுமார் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை நாடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

உலங்குவானூர்தி விபத்து- ஆய்வுக்கு வந்தது அமெரிக்க நிபுணர் குழு

மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிலங்கா விமானப்பரடை உலங்குவானூர்தியை பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களால் ஆபத்து இல்லை என்கிறது காவல்துறை

அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது ஆபத்தானது என விடுக்கப்படும் எச்சரிக்கைகளை சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது.

சோமரத்ன ராஜபக்சவை விசாரிப்பது சிக்கலை ஏற்படுத்துமாம்

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில்,  அது குறித்து விசாரணை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என,  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

சோமரத்னவின் கடிதம்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செம்மணிப் புதைகுழிகள் பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராவுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபரும், சர்வதேச சமூகமும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.