மேலும்

நாடு திரும்பும் அகதிகள் கைது- மீள்குடியமர்வை இடைநிறுத்தியது ஐ.நா

இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் வழித்துணையுடன், தாயத்தில் மீளக்குடியேற்றுவதற்காக அழைத்துச் செல்லப்படும் அகதிகள், சிறிலங்காவில் கைது செய்யப்படும் ஆபத்து உள்ளதால் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தாயகம் திரும்பிய குறைந்தது 4 அகதிகள்,  குடிவரவுச்சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 14ஆம் திகதி திருச்சியில் இருந்து 7 அகதிகளை சிறிலங்காவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை கடைசி நேரத்தில், அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகலிடம் தேடியுள்ள ஈழத் தமிழ் அகதிகளை சுய விருப்பின் அடிப்படையில் தாயகத்தில் மீளக் குடியேற்றும் நடவடிக்கைகளை, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் மேற்கொண்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *