செம்மணியில் இன்றும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 07 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வின் 24ஆம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போதே இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இன்று 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதையடுத்து, இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.