நீர்த்தேக்கத்தில் விழுந்த உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்பு
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றுக்காலை 12 சிறிலங்கா படையினருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானப்படையின் பெல் -212 உலங்குவானூர்தி, மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்,மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்த உலங்குவானூர்தியை மீட்கும் முயற்சிகளில் சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் இணைந்து இன்று காலை முதல் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இன்று மாலையில் சிதைந்து போயிருந்த உலங்குவானூர்தியின் பெரும் பகுதி, நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.