இந்திய- பாகிஸ்தான் பதற்றம்- களைகட்டும் கொழும்பு துறைமுகம்
இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்களினால், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் பாதைகள் நிறுத்தப்பட்டதால், சிறிலங்காவில் கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இது துறைமுக நடவடிக்கைகளை திறம்படவும் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றங்களை அடுத்து, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தவிர்த்து கொள்கலன் கப்பல்கள் பயணிப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, இந்தியாவின் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகமும் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளது.
இதனால் அரபிக் கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நாடத் தொடங்கியுள்ளன.