இன்று கொழும்பு வருகிறார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இன்றும் நாளையும் அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்றும், அதையடுத்து இந்தியாவுக்கு பயணமாவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஷின்ஷோ அபே அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த, ஜெனரல் நகாடானி கடந்த 2024ஆம் ஆண்டு மீண்டும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், சிறிலங்கா- ஜப்பான் இடையே மூலோபாய கலந்துரையாடல்களை நடத்தும் நோக்கிலுமே அவரது இந்தப் பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.