நெருக்கடியான நிலையில் சிறிலங்காவின் ஊடக சுதந்திரம்
2025ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திரச் சுட்டியில் சிறிலங்கா 139ஆவது இடத்தில், தரப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் சங்கம் இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியை நேற்று வெளியிட்டுள்ளது.
உலகின் 180 நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த பட்டியலில், சிறிலங்கா 139 ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு 150 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு முன்னேறியிருந்தாலும், நாட்டில் ஊடகத்துறை மிகவும் நெருக்கடியான அல்லது மிகவும் தீவிரமான நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.