மேலும்

மாதம்: November 2019

நாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் புதிய  அதிபராக  கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலும் சஜித்துக்கு அமோக வெற்றி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சுமார் 69 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தோல்வியை ஏற்றுக் கொண்டார் சஜித் – கோத்தாவுக்கு வாழ்த்து

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

வெற்றியை நோக்கி நகருகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 50 வீதத்துக்கும் சற்று குறைவான வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

கோத்தா வென்று விட்டதாக மொட்டு அறிவிப்பு – வெற்றியை கொண்டாட கோருகிறது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன.

வன்னி தேர்தல் மாவட்ட இறுதி முடிவு – சஜித் வெற்றி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதை அடுத்து, இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 84 வீத வாக்குகளை அள்ளிய சஜித் – இறுதி முடிவு

யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாச 84 வீதமான – 312,722 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

கழுகுக்கு வாக்களித்த யாழ். மக்கள் – அனுரகுமாரவுக்கு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளில் எதிர்பாராத வகையில் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றிருக்கிறார்.

இப்போது யார்? – முந்தினார் சஜித்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 49 வீத வாக்குகளுடன்  முன்னிலையில் இருந்து வருகிறார்.

வடக்கில் சரிந்தது ராஜபக்சவினர் செல்வாக்கு

வடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.