மேலும்

நாள்: 30th November 2019

கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தாவுக்கு  இராப்போசன விருந்து

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

நிசாந்த சில்வாவை நாடு கடத்த மறுத்ததா சுவிஸ்?- தூதரகம் அறிக்கை

சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை, நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கோத்தாவுடனான பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்தது – மோடி

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட தூதரக பணியாளர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை – சுவிஸ்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தமது தூதரகத்தின் பெண் பணியாளர், உடல் நிலை மோசமாக இருப்பதால், தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

யுஎன்டிபியின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக நாளை டிசெம்பர் 1ஆம் நாள் பதவியேற்கவுள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர்

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்னெக்கும் – இந்தியப் பிரதமர் நம்பிக்கை

சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா  அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கோத்தா கொடுத்த வாக்குறுதி – ஜெய்சங்கர்

அனைத்து இலங்கையர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அதிபராக தாம் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.