கோத்தா வென்று விட்டதாக மொட்டு அறிவிப்பு – வெற்றியை கொண்டாட கோருகிறது
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன.
சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொதுஜன பெரமுன, கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளது.
இதனிடையே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.