மேலும்

நாள்: 1st November 2019

சஜித்துக்கு சந்திரிகா ஆதரவு – 28 கட்சிகளுடன் புதிய கூட்டணி உடன்பாடு கைச்சாத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பலாலி – திருச்சி இடையே வாரத்தில் 3 விமான சேவைகள் – வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திட தடை விதித்தார் சிறிசேன

எதிர்வரும் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன், கொடை உடன்பாடு கைச்சாத்திடப்படமாட்டாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

‘நாற்காலி’ சின்னத்தில் 17 கட்சிகளின் கூட்டணி – கோத்தா தலைமை?

2020 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, பொதுஜன பெரமுனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, 17 கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன.

சட்டமா அதிபரின் ஒப்புதலுடனேயே எம்சிசி உடன்பாடு தயாரிப்பு

மிலேனியம் சவால் நிறுவன உடன்பாடு சட்டமா அதிபரின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்சிசி உடன்பாடு தேர்தலுக்கு முன் கையெழுத்திடக் கூடாது- மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக,  எம்சிசி உடன்பாடு உட்பட எந்தவொரு உடன்பாடும், வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடப்படக் கூடாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்

சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான வணிக விமான சேவைகள், வரும் 10ஆம் நாள் தொடக்கம் இடம்பெறவுள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.