ஐதேகவின் விருந்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள்
ஐதேகவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடந்த இராப்போசன விருந்தில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து இடம்பெற்றது.
இந்த விருந்துக்கு 12 நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது. எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விகிரமசிங்க வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்தார் என்று கூறப்படுகிறது.