இன்னொரு தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை – இராணுவப் பேச்சாளர்
சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என்றும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரகம் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்துள்ள இரண்டாம் நிலை எச்சரிக்கை குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை எமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
அவ்வாறான தகவல்கள் கிடைத்தால், அது குறித்து மக்களுக்கு அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படாத வகையில், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.