செப்ரெம்பர் 2ஆம் நாள் அதிபர் வேட்பாளரை அறிவிப்பார் மைத்திரி
அடுத்த மாதம் 2ஆம் நாள் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள, மாநாட்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் எதிர்காலம் தொடர்பாக உரையாற்றுவார்.
இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒரு கூட்டணியை உருவாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
அந்தக் கூட்டணி சாத்தியமில்லை என்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை ” என்றும் அவர் கூறினார்.