ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு
ரஷ்யாவின் இராணுவ நிலப்பரப்பு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த இராணுவ நிலப்பரப்பு ஆய்வுப் பிரிவின், மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் நிக்கோலாவிச் தலைமையிலான இந்தக் குழுவினர், நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் பேச்சுக்களை நடத்தியது.
சிறிலங்கா கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியல் டி சில்வா, கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நந்தன ஜெயரத்ன உள்ளிட்ட அதிகாரிகளுடன் ரஷ்ய இராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுக்களின் போது, இராணுவ நிலப்பரப்பு ஆய்வு, வரைபடம், மற்றும் அளவீடுகள் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.