மேலும்

இன்று மாலை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கவுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் இதனை இன்று காலை அறிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *