மேலும்

மாதம்: November 2018

பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் தாவினார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கட்சி தாவி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த

நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே கூட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விலைகள் குறைப்பு, பொருளாதார சலுகைகள் அறிவிப்பு – மகிந்தவின் புதிய உத்தி

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ள நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.

ரணிலைச் சந்தித்தார் கோத்தா

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு  இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றும் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,  இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்கு பதவி கிடைக்காது – உதய கம்மன்பில

நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கூட்டினாலும் கூட, புதிய அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, அரசாங்க இணைப்பேச்சாளரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டும் முடிவை சிறிலங்கா அதிபர் இன்னமும் எடுக்கவில்லை

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.