மேலும்

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கூட்டினாலும் கூட, புதிய அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, அரசாங்க இணைப்பேச்சாளரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

”நாட்டின் அரசியலமைப்பின் படியே, ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நீக்கமும், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவின் நியமனமும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்து தீர்ப்பைப் பெற முடியும்.

அரசியலமைப்பில் எந்த இடத்திலும், 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல.

எனினும், 113 இற்கும் அதிகமான பெரும்பான்மையை எம்மால் காட்ட முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *