மேலும்

இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை – மட்டக்களப்பு விரைகிறார் பூஜித ஜெயசுந்தர

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு விரைந்துள்ளார்.

வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் இன்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

காலியை சேர்ந்த நிரோஷன் இந்திக( 35 வயது), கல்முனையை சேர்ந்த கணேஸ் தினேஸ் ( வயது ) ஆகியோரை கொல்லப்பட்டவர்களாவர்.

இவர்களிடம் இருந்த இரண்டு- ரி 56 துப்பாக்கிகளும், மர்ம நபர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்த, சிறிலங்கா காவல்துறை மா அதிபர், மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய, மட்டக்களப்புக்கு விரைந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *