மேலும்

சிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு  வரவுள்ளன.

நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரும் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்கள், வரும் 7ஆம் நாள் வரை இங்கு தரித்து நிற்கும்.

‘சிஜிஎஸ் சமர்’ மற்றும் ‘சிஜிஎஸ் ஆர்யமான்’ ஆகிய ரோந்துக் கப்பல்களே கொழும்பு வரவுள்ளன. இந்தக் கப்பல்கள் காலி துறைமுகத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவில் இந்திய, சிறிலங்கா மாலைதீவு கடலோரக் காவல் படைகள் கடந்த 25 ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை ‘டோஸ்ரி’ என்ற கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டிருந்தன.

இதில் பங்கேற்ற இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல்களே நாளை கொழும்பு வரவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *