மேலும்

மாதம்: June 2018

திரிசங்கு நிலையில் 16 பேர் அணி – கூட்டு எதிரணியும் விரட்டுகிறது

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை தம்முடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற சிறிலங்கா படையினருக்கு அனுமதி அளிப்பதில் இழுபறி

சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காததால், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் மற்றொரு அணி புறப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கிறது.

சிறிலங்கா முப்படையினரை குடும்பத்துடன் கயாவுக்கு அழைத்துச் சென்ற இந்திய விமானப்படை விமானம்

சிறிலங்காவின் முப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்  160 பேர் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், நேற்று புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

“கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள், விரும்புகிறார்கள் என்ற போதும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

“பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, “நீதியரசர் பேசுகிறார்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

கோத்தா பற்றி அமெரிக்க தூதுவர் பேசவில்லை- என்கிறார் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார்.

வீட்டுத் திட்ட விவகாரத்தில் சீனத் தலையீடு – பொறியில் சிக்கியுள்ள கூட்டமைப்பு

வடக்கு- கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.