மேலும்

இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் – ஐ.நா குழு வலியுறுத்தல்

un-logoசிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு  வலியுறுத்தியுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு, சிறிலங்கா தொடர்பான கண்டறிவுகள் குறித்து  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

ஜெனிவாவில் ஜனவரி 15ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 02ஆம் நாள் வரை நடந்த சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் சிறிலங்கா , குவாட்டமாலா, பனாமா, சிஷெல்ஸ், ஸ்பெய்ன், சொலமன் தீவுகள், பாலோ மற்றும் மார்ஷல் தீவுகளில் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் சிறிலங்கா தொடரபாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடெற் படையணிக்கான பயிற்சியை இராணுவ செயற்பாடுகளுக்குள் உள்ளடக்கக் கூடாது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  தொடர்பான, றோம் உடன்பாடு மற்றும் ஜெனிவா பிரகடனங்கள் தொடர்பான மேலதிக நெறிமுறைகளை ஏற்றுக் கொள்வது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *