மேலும்

28 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்து பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கு விடுதலை

kks-pp-bus28 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு, நேற்று பருத்தித்துறைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

பின்னர் இராணுவ நடவடிக்கைகள் மூலம், வலி.வடக்கு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அண்மையில் மயிலிட்டி பகுதி விடுவிக்கப்பட்ட போதும், பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் சுமார் 3 கி.மீ வரையான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

kks-pp-bus

இதனால் வடமராட்சியில் இருந்து மயிலிட்டி செல்வதற்கு நீண்டதூரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பொன்னாலை – பருத்தித்துறை வீதி முழுவதுமாக திறந்து விடப்படும் என்று அறிவித்திருந்தார்.

நேற்றுக்காலை மயிலிட்டியில், பருத்தித்துறைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பேருந்துச் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ். படைகளின் தலைமையக கட்டளை தளபதி மற்றும் அரச , இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *